சென்னை: வாக்குச்சீட்டுகளை மாற்றி வழங்கிய காரணத்திற்காக 9 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 27ம் மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், வாக்குச்சீட்டு மாற்றி வழங்கியது, சின்னங்களே இல்லாமல் வாக்குசீட்டு அளித்தது உள்பட பல்வேறு குளறுபடிகள் அரங்கேறியது. இந்நிலையில் 2ம் கட்ட தேர்தல் நடைபெற்ற பகுதிகளில் வாக்குச்சீட்டுகளை மாற்றிய வழங்கிய காரணத்திற்காக 9 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.