மாணவர் இயக்கம் உறுதிமொழி ஏற்பு: மாணவரணி செயலாளர் அறிவிப்பு

சென்னை: ஜனவரி 1ல் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் திமுக மாணவரணி பங்கேற்கும் என்று மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘இளைய இந்தியா’’ என்ற அமைப்பின் தேசிய அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் டிசம்பர் 24ம் தேதி நடந்தது. இக்கூட்டம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரும் ஏஐஎஸ்ஏ தேசிய செயலாளருமான என்.சாய் பாலாஜியால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இதில் ‘‘இளைய இந்தியா’’ அமைப்பில் இணைந்து செயல்பட திமுக மாணவரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.மேலும் 2020ம் ஆண்டின் தொடக்கமாக இன்று ஜனவரி 1ம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திமுக மாணவரணி நிர்வாகிகள் அந்தந்த மாவட்டத்தில் மாணவர்களை திரட்டி மற்ற மாணவ இயக்கங்களோடு ஒருங்கிணைந்து நடத்த கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories: