பெரம்பூர்: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் (55). இவர், ராஜஸ்தானில் லாரியில் 25 டன் மரப்பலகை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டார். நேற்று அதிகாலை 3 மணியளவில் வியாசர்பாடி மகாகவி பாரதிநகர், ஆதிபராசக்தி கோயில் அருகே வந்தபோது, சாலை வளைவில் லாரியை வலதுபுறமாக திருப்பியுள்ளார்.அப்போது, எதிர்பாராதவிதமாக சென்டர் மீடியனில் மோதி லாரி நின்றது. லாரியில் அதிகளவு லோடு இருந்ததால் பின்னால் எடுக்க முடியவில்லை. அதிகாலையில் சம்பவம் நடந்ததால் யாருக்கும் உயிர் சேதம் இல்லை. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வியாசர்பாடி போக்குவரத்து எஸ்ஐக்கள் ஜபேந்திரன், பூபதி கண்ணன் ஆகியோர் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்த முயன்றனர்.