மும்பை: ஓடும் ரயிலில் யாரும் சாகசம் செய்ய வேண்டாம் என்று விபத்து குறித்த வீடியோவை வெளியிட்டு ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 26 -ம் தேதி ஆம்புலன்ஸ் ஓட்டுநரான தில்ஷன் என்பவர் திவா - மும்பை இடையே இயங்கும் மின்சார ரயிலில் பயணம் செய்யும் போது வாசலில் நின்று சாகசம் செய்துள்ளார்.அப்போது தண்டவாளம் அருகே இருந்த கம்பத்தின் மீது தில்ஷன் அதி வேகத்துடன் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து கீழே விழுந்து உயிரிழந்தான்.