ஓடும் ரயிலில் சாகசம் செய்ய வேண்டாம்...பயணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை

மும்பை: ஓடும் ரயிலில் யாரும் சாகசம் செய்ய வேண்டாம் என்று விபத்து குறித்த வீடியோவை வெளியிட்டு ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 26 -ம் தேதி ஆம்புலன்ஸ் ஓட்டுநரான தில்ஷன் என்பவர் திவா - மும்பை இடையே இயங்கும் மின்சார ரயிலில் பயணம் செய்யும் போது வாசலில் நின்று சாகசம் செய்துள்ளார்.அப்போது தண்டவாளம் அருகே இருந்த கம்பத்தின் மீது தில்ஷன் அதி வேகத்துடன் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து கீழே விழுந்து உயிரிழந்தான்.

இதனை அந்த ரயிலில் பயணம் செய்த ஒருவர் வீடியோ எடுத்து அதை வெளியிட்டார்.  இந்த வீடியோவை இந்திய ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. யாரும் இதுபோன்ற சாகச முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று  ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்த்க்கது.

Related Stories: