பண்ருட்டி: பண்ருட்டி அருகே திருத்துறையூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பானைகள் தயாரிக்கும் பணி கடந்த ஒருவார காலமாக நடந்து வருகிறது. கிராம பகுதிகளில் பொங்கல் பண்டிகையை, பானையில் பொங்கலிட்டு படையல் செய்து கொண்டாடுவர். இதற்காக அருகில் உள்ள ஏரியில் நிர்வாக அனுமதி பெற்று களிமண் எடுத்துவந்த சிறிய, பெரிய, நடுத்தரமான பானைகளை தொழிலாளர்கள் செய்து நெருப்பில் சுட்டு விற்பனைக்காக வைத்துள்ளனர்.