சென்னை: கிண்டி பாம்பு பண்ணையில் தென்கிழக்கு ஆசிய நாட்டில் இருக்கும் வெள்ளை நிற மலைப்பாம்பு, உமிழும் விஷப்பாம்பு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.பாம்பு பண்ணை செயல்தலைவர் டாக்டர். பால்ராஜ் கூறியதாவது: கிண்டியில் உள்ள சிறுவர் தேசிய பூங்காவின் அருகில், சென்னை பாம்பு பண்ணை அமைந்துள்ளது. மேலும் கடலில் மட்டுமே காணப்படும் கொடிய விஷத்தன்மை கொண்ட கடல் பாம்புகளும் இங்கு உள்ளது. நில பாம்புகளை விட கொடிய விஷம் கொண்டது. நல்ல பாம்புகளை விட நான்கு முதல் 10 மடங்கு வரை விஷத்தன்மை கடல் பாம்புக்கு அதிகம் உள்ளது.
இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விமானம் மூலம் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாட்டில் இருக்கக் கூடிய வெள்ளை நிற மலைப்பாம்பு மற்றும் உமிழும் விஷப் பாம்பு ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.