வியாசர்பாடியில் சிலிண்டர் வெடித்து 2 வீடுகள் நாசம்

பெரம்பூர்: வியாசர்பாடி நியூமெகசின்புரத்தை சேர்ந்தவர் ராஜி (45). இவரது தம்பி தாஸ் (44). இருவரும் லாரி டிரைவர்கள். முதல் தளத்தில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.  நேற்று காலை இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். ராஜ் மனைவி சித்ரா (40), தாஸ் மனைவி விஜயலட்சுமி (42) தங்களது 2 மகன்கள் உள்ளிட்ட 4 பேரும் வியாசர்பாடியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றனர். ராஜியின் 2வது மகள்  மீனா (20) வீட்டில் தூங்கினார். நேற்று காலை 6.30 மணிக்கு வீட்டில் இருந்து கரும்புகை வந்ததால்  அதிர்ச்சி அடைந்த மீனா வெளியில் வந்துள்ளார். சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் இருவரது வீடும்  நொறுங்கியது.

தகவலறிந்து வியாசர்பாடி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் 2 வீடுகளில் இருந்த பீரோ, டிவி, பிரிட்ஜ், ஏசி மெஷின் உள்பட பணம், நகை தீயில் கருகியது.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: