சென்னை: ஆர்.ஏ.புரம் வல்லீஸ்வரன் தோட்டம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் டிஜிட்டல் மின் மீட்டர்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 10 மீட்டர்களையும் பறிமுதல் செய்தனர். சென்னை ஆர்.ஏ.புரம் வல்லீஸ்வரன் தோட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இங்குள்ள சில கட்டிடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளன. இந்த குடியிருப்பில் உள்ள டிஜிட்டல் மின் மீட்டர்கள் மட்டும் மாயமானது. இதுகுறித்து தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கோட்ட உதவி செயற்பொறியாளர் பிரேம்குமார் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ேநற்று முன்தினம் இரவு ரகசியமாக கண்காணித்தனர்.