தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் : முதலமைச்சருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை : தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டு பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.குடியுரிமை சட்டத்தை ஆதரித்த பல மாநிலங்கள் குடிமக்கள் ஆவணத்தை அமல்படுத்தமாட்டோம் என கூறியுள்ளன என்பதை கடிதத்தில் குறிப்பிட்ட அவர், மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு முடிந்ததால் தேசிய குடிமக்கள் ஆவணம் தானாகவே உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Related Stories: