தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்துக்கு புதிய தலைவர்

சென்னை: தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக பணீந்திரரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு தலைமை செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சமீபத்தில் மத்திய அரசு பணிக்கு சென்ற சோமநாதனுக்கு பிரியா விடை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மோகன் பியாரேவுக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது. இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஆண்டு கணக்கு வரவு செலவு விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சங்கத்துக்கு தலைவராக இருந்த சோமநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மத்திய அரசு பணி மற்றும் ஓய்வு காரணமாக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்படி புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ஒருமனதாக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத் தலைவராக பணீந்திர ரெட்டி, துணைத்தலைவராக பங்கஜ் குமார் பன்சால், செயலாளர்களாக எம். சண்முகம், மைதிலி ராஜேந்திரன், இணைச் செயலாளராக பூஜா குல்கர்னி உள்ளிட்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர் என்று ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: