தாம்பரம்: மேற்கு தாம்பரம், பழைய ஸ்டேட் பேங்க் காலனி சாலையில் உள்ள வனப்பகுதியில் சிலர் தினமும் கஞ்சா அடித்து விட்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபடுவதாக தாம்பரம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து, தாம்பரம் காவல் நிலைய போலீசார் நேற்று சம்பவ இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த சில நபர்கள் போலீசை கண்டவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். பின்னர், போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.