தண்டையார்பேட்டை: ஏழுகிணறு, விவிஎம் தெருவை சேர்ந்த கோட்டமுத்து (41), நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் டீ குடித்தார். அப்போது, ரூ.3.50 லட்சம் வைத்திருந்த தனது பையை, அந்த கடையில் மறந்து வைத்துவிட்டு புறப்பட்டார். சிறிது நேரத்தில் பணப்பையை மறந்தது ஞாபகம் வந்ததால், உடனடியாக அந்த கடைக்கு திரும்பினார். ஆனால், அங்கு அந்த பை இல்லை. இதுகுறித்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனிடையே, அந்த டீக்கடைக்கு எதிரே நடைபாதையில் பூட்டு சாவி கடை நடத்தி வரும் ரமேஷ் (38) என்பவர், டீக்கடைக்கு சென்றபோது, பணப்பை இருந்ததாக கூறி, போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அதனை கோட்டமுத்துவிடம் ஒப்படைத்தனர்.