காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜீவா, கோபி மீது வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 12 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜீவா, கோபி மீது வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஜீவா, கோபி ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர். இரட்டைக்கொலையில் திருவள்ளூரில் 4 பேரும், காஞ்சிபுரத்தில் 15 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். 19 பேர் கைதான நிலையில் காஞ்சிபுரம் காவல்துறையினர் மேலும் 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரட்டைக்கொலை வழக்கில் சந்தேகத்திற்குரிய நபர்கள் 10 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: