கொல்கத்தா: ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்ற கூற்றுக்கு வானில் பறக்கும் விமானமும் விதிவிலக்கல்ல. இவ்வாறு மேற்கு வங்கத்தில் டிரக் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட இந்திய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வழியில் பாலத்தில் சிக்கிக் கொண்டது. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்த, அஞ்சல்துறையால் பயன்படுத்தப்பட்டு வந்த போயிங் விமானம் ஒன்று, கைவிடப்பட்டு, பயன்பாடற்று கொல்கத்தா விமான நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த விமானத்தை பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி ஒருவர், உலோகங்களை பிரித்தெடுப்பதற்காக விலைக்கு வாங்கி உள்ளார்.