திருவொற்றியூர்: எர்ணாவூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பைப்லைன் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. ஆனால், இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட எர்ணாவூர் ஆல் இந்திய ரேடியோ நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள், சாலை விரிவாக்கத்தின் போது வீடுகளை இழந்தவர்கள் ஆகியோருக்கு மாற்று குடியிருப்பாக வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 3500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு புழல் ஏரியில் இருந்து பைப்லைன் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு, குடியிருப்புக்கு அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி பின்னர், மோட்டார் மூலம் குடியிருப்பின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டியில் நிரப்பப்பட்டு குடியிருப்புவாசிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.
எர்ணாவூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர் : அதிகாரிகள் மெத்தனம்
- எர்ணகாவூர் குடிசை மாற்றம் வாரியம் குடியிருப்புகள்
- அதிகாரிகள் எர்ணகோவர் குடிசை மாற்றம் வாரியம் குடியிருப்புகள்