பாலசூர்: தரையிலிருந்து வான் இலக்குகளை அதிவிரைவாக தாக்கும் ஏவுகணை (கியூஆர்எஸ்ஏஎம்) நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. தரையிலிருந்து வான் இலக்குகளை தாக்கும் அதிவிரைவு ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்தது. இது ஒடிசா மாநிலம் சண்டிப்பூரில் உள்ள சோதனை மையத்தில் நேற்று காலை 11.45 மணியளவில் சோதித்து பார்க்கப்பட்டது.