குழு டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நிபந்தனைகள் தளர்வு: தெற்கு ரயில்வே உத்தரவு

சென்னை: ரயிலில் பயணிகள் மொத்தமாக பயணம் செய்ய குழு டிக்கெட் முறையை ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இதன்படி குழு டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கவுன்டர்கள் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். குறிப்பாக 30 டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இந்நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளை தளர்த்தி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒருவர் எத்தனை டிக்கெட் வேண்டும் என்றாலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். குழுவாக பயணம் செய்ய விரும்புவோர் காலை 9 மணிக்குப் பிறகு முன்பதிவு செய்யலாம். குழுவாக பயணம் செய்வதற்கான ஏதாவது ஒன்றை ஆதாரமாக காண்பித்தால் போதும். இதற்கான அனுமதியை முதன்மை முன்பதிவு அலுவலர் மற்றும் ரயில் நிலைய மேலாளர் ஆகியோர் அனுமதி வழங்குவார்.

Related Stories: