சென்னை: தண்டையார்பேட்டையில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டிடம் கட்டும் விவகாரம் தொடர்பாக, சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து ஆய்வு செய்து, விதிமீறல் இருப்பின் நடவடிக்கை எடுத்து, ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த மீனவர் நலச்சங்க தலைவர் தியாகராஜன், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் கட்டுமான நிறுவனம், தண்டையார்பேட்டையில் 27 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறது. சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் இந்த கட்டிடம் கட்டப்படுகிறது. எனவே, இந்த கட்டிடம் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.