சென்னை: வீட்டில் இருந்த ஊஞ்சலில் ஆடும் போது நைலான் கயிறு கழுத்தை இறுக்கியதால் 2ம் வகுப்பு மாணவன் ஒருவர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தான். சென்னை அபிராமபுரம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(43). இவரது மகன் கீர்த்திவாசன்(7). தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால் கீர்த்திவாசன் தன் வீட்டில் உள்ள ஊஞ்சலில் சுற்றியபடி விளையாடினான். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் நைலான் கயிறு கீர்த்திவாசன் கழுத்தை இறுக்கியது. இதில் சிறிது நேரத்திலேயே கீர்த்திவாசன் மூச்சு திணறி மயங்கினான்.