கட்டுமான பணியின்போது குடோன் மேற்கூரை இடிந்தது

திருவொற்றியூர்: மணலி புதுநகர் அருகே விச்சூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சரக்கு பெட்டகத்திற்கான குடோன் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு 20 அடி உயரம் கொண்ட மதில்சுவர் கட்டப்பட்டு, அதன் மீது  மேற்கூரை அமைக்கும் பணி ராட்சத பொக்லைன் மூலம் நேற்று நடந்தது. இதில், 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.   அப்போது, திடீரென மேற்கூரை உடைந்து விழுந்தது. சுதாரித்துக்கொண்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓடியதால், அதிஷ்டவசமாக தப்பினர். இதுகுறித்து மணலி புதுநகர் போலீசார்  விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: