மதுரை: மதுரை, கோரிப்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர் புது மண்டபத்தில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மதினா பேகம். மகள் ரிஷ்வானா பானு (22). இவருக்கு சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் ரிஷ்வானா பானு விவாகரத்து பெற்றார். இதற்கிடையே ரிஷ்வானா பானுவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். பல இடங்களில் பார்த்தும் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எனக் கூறி கொண்டு வந்துள்ளார். இதனால் தந்தை, மகள் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.