போலி ஆவணம் மூலம் ஜெர்மன் செல்ல முயன்ற 2 வாலிபர்கள் சிக்கினர்

சென்னை: போலி ஆவணம் சமர்ப்பித்து ஜெர்மன் செல்ல விசா பெற முயன்ற 2 தெலங்கானா வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜெர்மன் துணை தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகத்தில் தெலங்கானா மாநிலம் ஜகத்தியாலயா, ஜொலப்பூரை சேர்ந்த மாருதி பாத்தா (31) மற்றும் சுருகண்டி ஜெகன் (31) ஆகியோர், ஜெர்மன் செல்ல விசா கோரி விண்ணப்பித்திருந்தனர். நேற்று முன்தினம் ஜெர்மன் தூதரக அதிகாரிகள், அந்த ஆவணங்கள் மீது விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என தெரியவந்தது. இதுகுறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: