அன்னவாசல் அருகே 10 அடிநீள மலைப்பாம்பை இளைஞர்கள் பிடித்தனர்

புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே 10 அடி நீள மலைப்பாம்பை இளைஞர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டி கோரவயல் பகுதியில் வயல் வரப்பில் மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. இதனைக்கண்ட அப்பகுதி இளைஞர்கள் அந்த மலைப்பாம்பு பிடித்து அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் அந்த மலைப்பாம்பை காவல் துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து பிடிபட்ட மலைப்பாம்பை வன காப்பாளர்கள் நார்த்தாமலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். பிடிப்பட்ட மலைப்பாம்பு சுமார் 10 அடி நீளமும் 20கிலோ எடையும் இருந்தது. மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: