ஆலந்தூர்: பரங்கிமலை சுரங்கப்பாதையை ஒட்டி உள்ள சர்வீஸ் சாலையில் சேறும், சகதியுமாக நிறைந்து இருப்பதால் பொதுமக்கள் வழுக்கி விழுந்து செல்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரங்கிமலை சுரங்கப்பாதையையொட்டி உள்ள சர்வீஸ் சாலை வழியாக சென்று தான் படிக்கட்டு ஏறி ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அதேபோல் இந்த வழியாகத்தான் பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்துக்கும் செல்ல வேண்டும். இந்த பாதையில் மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் எப்போதும் சேறும் சகதியுமாக தான் காணப்படுகிறது.