திமுக பேரணியில் மநீம பங்கேற்கும்: கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி பங்கேற்கும் என கமல்ஹாசன் தெரிவித்தார். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைமையில் வரும் 23ம் தேதி கண்டன பேரணி நடைபெற உள்ளது. இதில் 11 கட்சிகள் பங்கேற்கின்றன. திமுக தலைமையில் நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி பங்கேற்கும்’ என்றார்.

Related Stories: