சென்னை: தமிழகத்தில் உள்ள 121 நகராட்சி தலைவர் பதவிகளுக்கான இடஒதுக்கீட்டை அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 27 மற்றும் 30ம் தேதி 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் நகர்ப்புறங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வேட்புமனு தாக்கல், வைப்புத் தொகை, அதிகபட்ச செலவுத் தொகை, வாக்காளர் பட்டியல் வெளியீடு, வேட்புமனு தாக்கல், வேட்பாளர் பட்டியல் வெளியீடு உள்ளிட்டவைகள் தொடர்பான தொடர்பான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் மாநகராட்சி மேயர் பதவிக்கான இடஒதுக்கீடு பட்டியலும் வெளியிடப்பட்டது.