சென்னை: தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் முறைப்படுத்துதல் சட்டத்தை சென்னை மாநகராட்சி உருவாக்கியது. இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி புள்ளிவிவரப்படி 39 ஆயிரம் தெருவோர வியாபாரிகள் இருப்பது ெதரியவந்து. ஆனால் அதில் 23 ஆயிரம் பேர் மட்டுமே பயோ மெட்ரிக் முறையில் தங்களின் கடைகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தெருவோர வியாபாரிகளை முறைப்படுத்துவது தொடர்பான அனைத்து துறைகள் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைளியில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்றது. மாநகராட்சி வருவாய் மற்றும் நிதித்துறை இணை ஆணையர் லலிதா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வட்டார துணை ஆணையர்கள் தர், ஆல்பி ஜான், ஆகாஷ், முதன்மை தலைமை பொறியாளர் புகழேந்தி, பேருந்து சாலைகள் துறை கண்காணிப்பு பொறியாளர், காவல் துறை இணை ஆணையர், புளியந்தோப்பு சரக துணை ஆணையர், மண்டல அலுவலர்கள், செயற் பொறியாளர்கள், நெஞ்சாலைத்துறை அதிகாரகள் கலந்து கொண்டனர்.
தெருவோர வியாபாரிகளை முறைப்படுத்த மண்டல அளவில் ஒருங்கிணைப்பு குழு: இணை ஆணையர் அறிவுறுத்தல்
- கூட்டு ஆணையாளர்
- ஸ்ட்ரீட்கார் விற்பனையாளர்களை ஒழுங்குபடுத்துவதற்கான பிராந்திய அளவிலான ஒருங்கிணைப்புக் குழு
- தெரு வியாபாரிகள்