சென்னை: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை உடனே விடுதலை செய்யுமாறு மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 82 வயதாகும் பரூக் அப்துல்லா எவ்வித காரணமும் இன்றி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பரூக் அப்துல்லாவை காவலில் வைத்திருப்பது ஜனநாயக மரபையும், அரசியல் சட்டத்தையும் அவமதிக்கும் செயல் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.