பொன்னேரி: அரியன்வாயல் பகுதியில் வடமாநிலத்தவர்கள் கட்டிய வீடுகளை அகற்றவேண்டும் என்று மக்கள் மனு கொடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அரியன்வாயல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் வட மாநிலத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கொட்டகை அமைத்து வசித்தனர். இந்த பகுதியில் போதிய வசதியில்லாததால் மக்கள், திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்திவந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது. மேலும் இவர்கள் வந்தபிறகு மீஞ்சூர் பகுதியில் வழிப்பறி திருட்டு மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.