பருவநிலை மாற்றம் காரணமாக உலகளவில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பருவநிலை மாற்றத்தால், குதிரைகள் எடை அதிகரித்து வருகிறது என பிரிட்டனில் உள்ள கால்நடை சேவைகள் மைய இயக்குனர் ஜில்லிஸ் மொபட் தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தால் மழை மற்றும் வெயில் அதிகரிக்கிறது. இதனால் புற்கள் அதிகளவில் வளர்கின்றன. புற்கள் அதிகமாக கிடைப்பதால் குதிரைகள் தன் தேவைக்கு அதிகமான அளவில் உட்கொள்கிறது. இதனால் அதன் எடை அதிகரிக்கிறது. உரிமையாளர்களும் குதிரைகள் சாப்பிடும் அளவை எந்நேரமும் கண்காணிப்பது கடினம்.