குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

திருவாரூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்னர். திருவாரூரில் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திருத்தச் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலை மாதிரி கல்லூரி மாணவர்கள் குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

Related Stories: