சென்னை: தமிழக அரசுப் பணியாளர்கள் தேர்வில் மோசடி செய்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், தொகுதி-1 பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுடைய பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. துணை ஆட்சியர்கள், காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் பொறுப்புக்காக நடைபெறுகிற இந்த தேர்விற்கான நேர்காணல், வருகிற டிசம்பர் 23ம் நாள் முதல் நடக்கிறது.
இதில் கலந்துகொள்பவர்களுடைய மதிப்பு எண்களை, பேனாவால் எழுதக்கூடாது, கண்டிப்பாக பென்சிலால் மட்டுமே எழுத வேண்டும் என, தேர்வு ஆணைய உறுப்பினர்களுக்கு தமிழக அரசு, அறிவுறுத்தி இருப்பதாக அறிகிறேன். மதிப்பு எண்களை திருத்தி, தங்களுக்கு வேண்டியவர்களை தேர்வு செய்வதற்காக, இத்தகைய ஏற்பாடு நடந்து வருகிறது.