சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் விநாயகர் தேருக்கு இரும்பு சக்கரம்

சுசீந்திரம் : சுசீந்திரம்  தாணுமாலயசுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா வரும் ஜனவரி 1ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  விழாவின் 9ம் நாள் விநாயகர் தேர், சுவாமி தேர், அம்பாள் தேர் ஆகிய 3  தேர்கள் வீதியுலா வரும் தேரோட்டம்  நடக்கும். இதற்காக விநாயகர் தேருக்கு  இரும்பு வீல் பொருத்துவதற்காக தேவசம்போர்டு ₹3 லட்சம் ஒதுக்கியது. இதில்  விநாயகர் தேரின் 4 சக்கரங்கள், 2 அச்சு ஆகியவை இரும்பால் போடப்படுகிறது. இந்த  பணி நேற்று காலை தொடங்கியது.

நேற்று (6ம் தேதி) பாபர் மசூதி  இடிப்பு தினம் என்பதால் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில்  பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு  உட்படுத்தப்பட்டனர். சந்தேகப்படும் நபர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி  மூலம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: