சுசீந்திரம் : சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா வரும் ஜனவரி 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவின் 9ம் நாள் விநாயகர் தேர், சுவாமி தேர், அம்பாள் தேர் ஆகிய 3 தேர்கள் வீதியுலா வரும் தேரோட்டம் நடக்கும். இதற்காக விநாயகர் தேருக்கு இரும்பு வீல் பொருத்துவதற்காக தேவசம்போர்டு ₹3 லட்சம் ஒதுக்கியது. இதில் விநாயகர் தேரின் 4 சக்கரங்கள், 2 அச்சு ஆகியவை இரும்பால் போடப்படுகிறது. இந்த பணி நேற்று காலை தொடங்கியது.