சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென்தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது. குமரிக்கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.