வீட்டை சுத்தம் செய்யும்போது விபரீதம் ஷூவில் மறைந்திருந்த பாம்பு பெண்ணை கடித்தது : ஆபத்தான நிலையில் சிகிச்சை

சென்னை: வீட்டை சுத்தம் செய்யும் போது ஷூவில் மறைந்திருந்த பாம்பு கடித்து பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை கே.கே.நகர் கன்னிகாபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் பழனி(39). இவரது மனைவி சுமித்ரா(35).   கடந்த ஒரு வாரமாக சென்னை முழுவதும் கன மழை செய்து வருகிறது. இதனால் வீடு முழுவதும் சகதியாக இருந்ததால் நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணிக்கு சுமித்ரா சுத்தம் செய்துள்ளார். வீட்டின் கழிவறை அருகே இருந்த ஷூவை எடுத்து வைக்கும்போது, அதில் இருந்த நச்சு பாம்பு ஒன்று சுமித்ராவை கடித்தது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார்.

சத்தம் கேட்டு அவரது கணவர் பழனி மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சுமித்ராவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உடல் முழுவதும் விஷம் பரவியதால் மேல்சிகிச்சைக்காக உடனே ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: