சென்னை: தமிழகத்தில் மேலும் 75 புதிய கால்நடை கிளை நிலையங்கள் ரூ.3 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட 19வது மாநில கணக்கெடுப்புபடி 227.23 லட்சம் கால்நடைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. செயற்கை கருவூட்டல் திட்டத்தின் கீழ் கால்நடைகள் அதிகளவில் உயர்ந்துள்ளது. இதன்மூலம் பால் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கால்நடை துணை மையங்கள் மூலம் இனப்பெருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.