சென்னை: உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரத்தை உயர்த்த இந்தி உள்பட பல மொழிகள் கற்று தரப்படுகிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறி உள்ளார். உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி சான்றிதழ் படிப்பை அறிமுகம் செய்துள்ளதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டன அறிக்கை வெளியிட்டார். அதில், மொழிப் பிரச்சினையில் தமிழகம் ஒரு கந்தக பூமி என்பதை மறந்து தமிழக மக்களின் உணர்வுகளோடு மீண்டும் சீண்டி விளையாடத் துவங்கியிருக்கும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் உடனடியாக இந்த அறிவிப்பினை திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன் என கூறி இருந்தார்.