சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் பனி, வெயில் என பருவநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுக்க அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் திறந்த வெளி இடங்கள் மற்றும் ரயில்வே இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த நீரில் கொசுக்கள் வேகமாக உற்பத்தியாகி வருகின்றன. உள்ளாட்சிகளில் பொதுசுகாதாரம் பாதுகாக்கப்படுவது நாளுக்கு நாள் சவாலாக மாறி வருகிறது. பொதுசுகாதார பணிகளை மேற்கொள்ள போதுமான அளவில் பணியாளர்கள் இல்லை என்பது ஒருபுறம், மறுபுறம் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்மையால் வீட்டில் சேரும் குப்பை தெரு, வாய்க்கால்களில் வீசி எறிய சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற செயல்களால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரப்பும் காரணிகளான ஈ, கொசு போன்றவை எந்நேரமும் தொல்லைகளாக உருவாகி உள்ளன.பகல் முழுவதும் ஈ தொல்லையால் அவதிப்படும் பொதுமக்கள், சூரியன் மறைந்தால் கொசு தொல்லைக்கு ஆட்பட நேரிடுகிறது. இரவில் கொசு விரட்டுவதற்கென மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் கொசுக்கள் படையெடுப்பு டெங்கு காய்ச்சல் பீதியில் பொதுமக்கள்: மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்
- கொசுக்கள்
- டெங்கு காய்ச்சல் பீதி: மருத்துவமனைகளில் நோயாளிகள் திரட்டுகிறார்கள்
- கொசு படையெடுப்பு
- பொது