மகனை கழுத்தை நெரித்து கொன்று ஆட்டோ டிரைவர், மனைவி தற்கொலை

செங்கோட்டை: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை கட்டளைகுடியிருப்பை சேர்ந்தவர் கந்தசாமி (35) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இந்துமதி(28). இவர்களது மகன்கள் சின்னமுத்திரன் (6), ஏகாந்தமூர்த்தி (2). போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த கந்தசாமி சிரமப்பட்டு வந்துள்ளார். சின்னமுத்திரன் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்துமதி மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் பெற்றுளார். அதை திரும்ப செலுத்தும்படி அடிக்கடி கேட்டு வந்துள்ளனர். வறுமை வாட்டியதாலும், கடன் தொல்லையாலும் மனமுடைந்த தம்பதி, நேற்று முன்தினம் இரவு மூத்த மகன் தூங்கியதும், அவனது கழுத்தை துண்டால் நெரித்து கொன்றுவிட்டு, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். வறுைமயின் காரணமாக தற்கொலை செய்வதாக வீட்டுச்சுவரில் கந்தசாமியின் 2வது குழந்தை ஏகாந்த மூர்த்தி, அருகில் உள்ள பாட்டி வீட்டில் வளர்ந்தால் அவன் உயிர் தப்பினான்.

Related Stories: