துரைப்பாக்கம்: அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி 2 பேரிடம் 15 லட்சம் பணம் மோசடி செய்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் திருமலை (45). சென்னை திருவான்மியூர் பகுதியில் தங்கி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பான் கல்லூரியில் கணிதவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். திருமலையும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (40), ரேணுகா தேவி (38) ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் சென்னை கொட்டிவாக்கம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தனர்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு மணிகண்டன், ரேணுகா தேவியிடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி திருமலை 15 லட்சம் பணம் பெற்றுள்ளார். இதை நம்பும் விதமாக இருவருக்கும் தலா ₹7.50 லட்சம் மதிப்பிலான 2 காசோலை வழங்கி உள்ளார்.