மதுரை: இந்து அறநிலையத்துறை, வக்பு வாரியம் போல, கிறிஸ்தவ அமைப்புகளை கண்காணிக்க தனி வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, மாகாளிப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் ெசய்த மனு: இந்து மத கோயில்கள், மடங்கள் உள்ளிட்டவை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றின் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் உள்ளிட்டவை ஆண்டுதோறும் முறையாக தணிக்கை செய்யப்படுகிறது. இவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. இதேபோல், இஸ்லாமிய அமைப்புகளின் செயல்பாடுகள், சொத்துக்கள் உள்ளிட்டவை வக்பு வாரியத்தின் கீழ் வருகின்றன. இவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் வக்பு வாரியத்தால் கண்காணிக்கப்படுகிறது.
அறநிலையத்துறை, வக்பு வாரியம்போல கிறிஸ்தவ அமைப்புகளை கண்காணிக்க வாரியம்? மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
- கிறிஸ்தவ அமைப்புகளின் கண்காணிப்பு வாரியம்
- அறக்கட்டளை
- மத்திய
- கிறிஸ்தவ அமைப்புகளின் கண்காணிப்பு வாரியம் மாநில அரசுகள்
- மாநில அரசுகள்