சென்னை: செய்தித்துறையில் 3 இணை இயக்குநர்களுக்கு கூடுதல் இயக்குநர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு: ஆளுநர் மாளிகையில் இணை இயக்குநராக உள்ள சிவ.சு.சரவணன், கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்று, அதே துறையில் தொடருவார். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (புதுடெல்லி) இணை இயக்குநராக உள்ள பி.முத்தையா, கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு பெற்று அதே துறையில் தொடர்ந்து பணியாற்றுவார்.