செய்தித்துறையில் இணை இயக்குநர்கள் 3 பேருக்கு பதவி உயர்வு

சென்னை: செய்தித்துறையில் 3 இணை இயக்குநர்களுக்கு கூடுதல் இயக்குநர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு: ஆளுநர் மாளிகையில் இணை இயக்குநராக உள்ள சிவ.சு.சரவணன், கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்று, அதே துறையில் தொடருவார். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (புதுடெல்லி) இணை இயக்குநராக உள்ள பி.முத்தையா, கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு பெற்று அதே துறையில் தொடர்ந்து பணியாற்றுவார்.

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழக இணை இயக்குநர் அம்பலவாணன், பதவிஉயர்வு பெற்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் கூடுதல் இயக்குனராக  நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: