அண்ணா பல்கலை தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: கனமழையால் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அன்ட் பிளானிங், அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி, குரோம்பேட்டை எம்ஐடி ஆகிய கல்லூரிகளில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 150க்கும் அதிகமான கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம், அதனுடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் இன்று நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கல்லூரிகளுக்கு வந்து செல்வதில் இருக்கும் சிரமத்தை தவிர்ப்பதற்காக துணை வேந்தர் துரைசாமி தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளார். இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் வேறு ஒரு நாளில் நடைபெறும். அந்த தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: