சென்னை: சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கேரளாவை சேர்ந்த சஜீஷ் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சரிதா. இவர்கள் அணுமின்நிலைய குடியிருப்பில் வசிக்கின்றனர். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த சஜீஷின் மாமனார் கோழிக்கோடு அடுத்த வடகரா பகுதியை சேர்ந்த தம்பதி ராஜசேகர் (68). மாமியார் சாந்தா (65) ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை வந்தனர். இந்நிலையில் பூந்தமல்லியில் நேற்று காலை தன் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காரில் ராஜசேகர், சாந்தா ஆகியோர் காரில் சென்றனர். புதுப்பட்டினத்தை சேர்ந்த கண்ணன் (42) என்பவர் காரை ஓட்டினார். திருப்போரூர் அருகே ஆலத்தூரை அடுத்துள்ள கருங்குழி பள்ளம் என்ற இடத்தில் கார் வந்தபோது எதிர் திசையில் புதுச்சேரி நோக்கி சென்ற ஒரு டிராவல்ஸ் நிறுவன கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒரு கார் மீது மோதியது.