சென்னை: தமிழகத்தில் மேலும் 30 எம் சாண்ட் குவாரிகள் சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளது. தமிழகத்தில் ஆற்றுமணலுக்கு மாற்றாக ஒரிஜினல் எம்சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்களை கண்டறிந்து அந்த குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்க முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இயங்கி வந்த 1200 குவாரி உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதி இருந்தது. அதன்பேரில் தற்போது வரை 184 குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும் 30 குவாரிகள் சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளது. இந்த குவாரிகளுக்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு கூட்டம் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த 14 பேர் அடங்கிய நிபுனர்கள் குழுவினர் ஆய்வு செய்து விண்ணப்பித்த குவாரிகளுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர்.