பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே குப்பம்பாளையம் பகுதியில் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப்பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த போதையம்மாள் (70) வீட்டில் சோதனை நடத்தியபோது, 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விசாரணையில் போதையம்மாளுக்கு அவரது மகள் அன்னலட்சுமி கஞ்சா வழங்கியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் போதையம்மாள், பழநி எம்ஜிஆர் நகரில் வசிக்கும் அவரது மகள் அன்னலட்சுமி (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.