சென்னை: ஸ்ரீனிவாசாடூர் ஆப்பரேட்டர்ஸ் உரிமையாளர் சேஷாத்ரி கூறியதாவது: கடந்த பல ஆண்டுகளாக எண்ணற்ற சுற்றுலாக்கள் குறைந்த கட்டணத்தில் ஏற்பாடுகள் செய்து வருகிறோம். 16 நாட்கள் நேபாள் சுற்றுலாவில் சென்னையில் இருந்து ரயில் மூலம் அலகாபாத் புறப்பட்டு கங்கா, யமுனா, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடல். நேரு பிறந்த வீடான ஆனந்தபவன் பார்த்தல், நைமிசாரண்யம், ராமர் பிறந்த அயோத்தி சென்று சரயு நதியில் நீராடல், ராம ஜென்மபூமி பார்த்தல். நேபாளில் புத்தர் பிறந்த இடமான லும்பினி, போக்ரா, ஜோம்ஜோம், முக்திநாத் தரிசனம், காட்மண்டுவில் பசுபதிநாத், புத்த நீல்கண்ட், குஜ்ஜேஸ்வரி சக்தி பீடம் பார்த்து இரவு தங்குதல். மனக்கமனா தேவியை கேபிள்கார் மூலம் தரிசனம் செய்தல்.