திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் முன்விரோத தகராறு காரணமாக கிராம நிர்வாக அலுவலர் மீது போலீஸ்காரர் ஒருவர் ஆசிட் வீசியிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை தென்றல் நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கேலிப்பட்டு கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இவருக்கும் வேங்கிக்கால் உண்ணாமலையம்மன் நகரில் வசித்து வரும் க்யூ பிரிவு காவலர் ஸ்ரீபாலுக்கும் இடையே பல வருடங்களாக தகராறு இருந்து வந்தது. ஸ்ரீபாலுவின் மனைவிக்கும் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாருக்கும் இருக்கும் தகாத உறவே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஸ்ரீபால் வீட்டில் இல்லாத போது அங்கு சென்ற சிவகுமார், ஸ்ரீபாலுவின் தாயாருடன் சண்டையிட்டுள்ளார்.