ஆண்டிமடம் காவல்நிலைய தாக்குதல் வழக்கில் 11 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

சென்னை: ஆண்டிமடம் காவல்நிலைய தாக்குதல் வழக்கில் தமிழர் விடுதலை படையைச் சேர்ந்த 11 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை பூவிருந்தவல்லியில் உள்ள வெடிகுண்டுகள் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது. தண்டனை விவரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. 11 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: