அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு: திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படுகிறது. 2.05 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக ரு.2,363 கோடி தமிழக அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

Related Stories: